Poems

வருகை

ஞானதீபன் வந்தவுடனேயே ஒருவனைக் 

கொன்று விடுகிறான் 
எந்த ஆண்டு வந்தான்? 
ஜோர்மனியா? பிரான்ஸா? 
எதுவும் தெரியவில்லை, தெரிவதெல்லாம் 
வந்தவுடனேயே ஒருவனைக் 
கொன்றுவிடுகிறான்
 
அவனைக் கொல்ல வேண்டும் போலிருந்தது
கொன்றுவிடுகிறான்
பின்னர்;
பின்னர் எதுவுமில்லை
 
கொல்லப்பட்டவன் தமிழனாயும்
வெள்ளைக்காரனாயும்
இரண்டு உருவங்களில் அவனுக்குத் தெரிகிறான்
 
இருவரையும் அழைத்துக் கொண்டு பொலிஸிற்க்குப் போகிறான்
அகதிக்காக விண்ணப்பிக்க.
 
“ஐயா! எனது காலத்துக்கால 
இடப் பெயர்வுகளையும் சித்திரவதைகளையும் 
உயிராபத்துகளையும் மற்றும் கஸ்ர-நஸ்ரங்களையும் 
எங்கிருந்து எப்படித் தொடங்குவதென்று தெரியவில்லை………”