Poems

பெண்

மழைக்கு முன் பே

காற்று குளிர்ந்துவிடும்போது
இலைப் பச்சையாக மாறிவிடுகிறேன்
 
அடி நிலத்தின் கீழ்
திரவியமாய் விழைகிறேன்
 
பித்தமேற்றும்
ஆர்ப்பரிக்கும் கடலின்
உப்பை விழுங் கிய ஆகாயம்
 
கனவும் விஷமுமான
மந்திரம் நான்
 
காலங் களின் மீது
அறைகூவல் விடுக்கும்
சொல் ஒன் றின்
இடதும் வலதுமாவேன்
 
என்னை
எங் கு ஒளித்து வைக்க முடியும்